Monday 5 March 2018

இன்றைய உலக சினிமா - நிலவழகன் சுப்பையா

 இன்றைய உலக சினிமா

நிலவழகன் சுப்பையா



உலக சினிமா என்று குறிப்பிட்டவுடன் அது எந்த நிலத்தை சேர்ந்தது எந்த காலத்தை சேர்ந்தது என்ற கேள்வி கூடவே எழும். இந்தியாவில் இருந்து அழைக்கும் பொழுது அமெரிக்க சினிமாவை தவிர்த்து ஏனையவற்றை உலக சினிமா என்று அழைக்கிறோம். அதைத்தாண்டியும் ஒரு சிலவரைமுறைகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. உலக சினிமா என்பது ஒரு சில அழகியல் அம்சங்களை கொண்ட திரைமொழியை குறிகிறது என்பது என் எண்ணம். அத்தகைய திரைமொழி கடந்த நூற்றாண்டு கால சினிமா வரலாற்றில் மாறிக்கொண்டே வந்து இருக்கிறது. சினிமாவில் உலகம் முழுக்க கதைசொல்லலில், திரைமொழியில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் என்ன.சிந்தனைத்தளத்தில் சினிமா எவ்வாறான வளர்ச்சியை அடைந்திருக்கிறது இவற்றை ஆராய்வதன் மூலம்தற்கால சினிமாவைப் புரிந்துகொள்ளலாம்.

பொதுவான ஒரு மாற்றம் என்று கூறவேண்டுமெனில் உலக சினிமா மெதுவாக ரியலிச சினிமாவை நோக்கி நகர்ந்து வந்து விட்டது. ரியலிச சினிமா புதிதாக உருவான மொழியோ தத்துவமோ இல்லை.1940 களில் தொடங்கி இத்தாலிய நியோ-ரியலிச சினிமாக்களும்80 கள் தொடங்கிஇரானிய சினிமாக்களும் உருவாக்கிய ஒரு பாணிதான். ஆனால்அது இன்று சற்றே மாற்றமடைந்து மிகுந்த நேர்த்தியுடன் செய்யப்பட்டு வருகிறது.ரியலிச சினிமா என்றால், கதை நடக்கும் இடம், கதாபாத்திரங்கள்அவர்களின்மனச்சிக்கல்கள், முரண்கள் இவை இயல்புவாழ்க்கைக்கு மிகவும் அருகில் அமைந்திருக்கும். ரசிகனின் மனதில் அந்த கதை உண்மைதான்என்பதுபோன்றஒரு நம்பிக்கையை விதைக்கும். அதன்மூலமாகபடத்தின் உணர்வுகளை சுலபமாக கடத்தி விட முடியும். சிந்தனைதளத்திலும் அரசியல் தளத்திலும் இயல்பான மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும்பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு வரும் போக்கும்கூட தற்கால சினமாவை இவ்வாறு தகவமைத்துக்கொள்ள காரணமாக இருந்திருக்கலாம். 
 

உதாரணமாக இந்த வருடம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட The night I swam (Japan, 2017) இயல்பு வாழ்க்கைக்கு மிக மிக அருகில் நிகழும் ஒரு படம். அடர்ந்த பனி மூடிய அந்த ஜப்பானிய சிறுநகரத்தில் காலையில் விழித்தெழும் சிறுவன் தன்பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டதை அறிகிறான். விடிந்திராத அந்த காலையில் தன் அக்காவை எழுப்ப முயன்றுதோற்று பெற்றோரின் படுக்கைக்கு சென்று ஏக்கத்தோடு உறங்கி போகிறான். பிறகு அவர்கள் இருவரும் தானாக கிளம்பி பள்ளி செல்கிறார்கள். ஏதோ தோன்றியவனாக பள்ளியின் வளாகத்தை தாண்டி ரயில் செல்லும் திசையை நோக்கி நடக்கிறான். ஆளுயரபனியில் அவன் ஒரு சிறு எறும்பைப்போல ஊர்ந்து ஏதோ ஒரு திசையை நோக்கி போய்க்கொண்டே இருக்கிறான். எந்த ஒரு இடையூறுமின்றி அவனின் அந்த இயல்பான பயணத்தை கேமரா தள்ளி இருந்து அவதானிக்கிறது. அவனின் பார்வையில் அந்த பனி சூழ்ந்த நிலப்பரப்பும் அதன் அழகும், ஆபத்தும் காட்சிகளாக விரிந்துகொண்டே இருக்கிறது. அவன் எங்கே செல்கிறான் அவனுக்கு ஏதாவது நடந்து விடுமா என்ற பதபதைப்பு மட்டும் நம்மை ஒட்டிகொள்கிறது. அவன்விளையாடிக்கொண்டேஒரு ரயில் நிலையத்தை அடைந்து ரயிலுக்காக குளிரில் காத்திருந்துரயில் வந்தவுடன் அதில்ஏறி தூங்கி போகிறான். கடைசி நிறுத்தத்தில் ரயில் நின்றும் எந்த சலனமும் இன்றிதூங்கிக்கொண்டே இருக்கிறான்.பிறகுஅவனாக விழித்து ரயில்நிலையத்தை தாண்டிதெருக்களை அடைந்து எதையோ தேடுகிறான். ஒருமீன்வண்டிசெல்வதை பார்த்து அதை துரத்த முற்பட்டு தோற்கிறான்.
தான் தூங்கிய பின்பு வீடு திரும்பி, எழும்பும் முன்பே வேலைக்கு சென்று விடும் அவனின் தந்தையை தேடித்தான்இந்த பயணம் என்று நமக்கு சிறுதுசிறிதாக புரிய ஆரம்பிக்கிறது. தந்தை ஒரு மீன் சுத்திகரிக்கும் ஆலையில் வேலை செய்பவர் என்பது மட்டுமே அவனுக்கு தெரியும்.அந்த ஒரு தகவலை வைத்துக்கொண்டுநீண்டதூரம் கடந்து வந்துவிட்ட அவனின் பயணம் நம்மைபதபதைக்கவைக்கிறது.


படம்முழுக்கஅந்தபயணம் எந்த மிகைப்படுத்தலும் இன்றி உண்மையாக நிகழ்வது போலவே இருந்ததுதான் இந்த படத்தின் வெற்றியும் கூட. அவனின் சிறிய சிறய செயல்கள், அந்தநிலப்பரப்பின் ஊடாகஅவனுக்கு பயணித்துவர தெரிந்திருக்கிறதுஎன்பது நமக்கு ஆச்சர்யமாகவும்,அவன் பெற்றோரில்லாமல் எத்தனை தனித்திருந்தால் இந்த சிறிய வயதில் இதையெல்லாம் கற்றுகொண்டிருப்பான் என்பதும் ஒரு மென்சோக உணர்வை கிளரும். இந்த படம் முழுக்க ஒரு வசனம் கூட பேசப்படவில்லை. அதற்கான தேவையும் அவனுடைய இந்த தனித்த பயணத்தில் இருக்கவில்லை.
இந்த பயணத்தின் ஊடே ஒரு அங்காடியுள் சென்று அங்கே வைக்கப்பட்டிருக்கும்தண்ணீர்குடுவையில் நீர் அருந்தி விட்டு இயல்பாகநடக்க ஆரம்பிப்பான்.வேறொரு காட்சியில்,ஒரு சந்தேகத்துக்குரிய ஆளைப்பார்த்தவுடன் எச்சரிக்கையாக வேறு திசையை நோக்கி ஓடிவிடுவான். திக்குதிசை தெரியாமல் தனித்துவிடப்பட்டஅந்த நேரத்தில் கடும் பனியும் சேர்ந்து கொட்ட ஆரம்பிக்கும். குளிர் வாட்டி எடுக்க ஆரம்பிக்கும் போது, கார்கள் நிறுத்தப்பட்ட ஒரு பார்க்கிங்கில் இருக்கும் ஒவ்வொரு காராக திறந்து பார்ப்பான். அதிர்ஷ்டவசமாக ஒரு காரின் கதவு திறக்கவே அதற்குள் சென்று அயர்ச்சியில் மீண்டும் உறங்கிப்போய்விடுவான்.

பனிக்காட்டில் தொலைந்து போனவன் தந்தையை கண்டுபிடித்தானா, பலமைல் தூரம் தாண்டி வந்தவன் பாதுகாப்பாக வீடு போய் சேர்ந்தானா. அவன் தந்தையை அன்று இரவாவதுபார்க்கும் வாய்ப்புகிடைதத்தா என்ற கேள்விகள் மேலெழுந்துபடத்தின் இறுதியில் நவீன வாழ்கை குடும்பபங்களை எவ்வாறு சிதைக்கிறது என்ற ஒற்றை உணர்வைநமக்குவிட்டுச்செல்லும்.


இந்தப்படம் ரியலிச சினிமாவாக மாறுவது முக்கியமான மூன்று கூறுகளால்,முதலில், கதைநம்பகத்தன்மையான ஒரு நிலப்பரப்பில்நிகழ்கிறது. இரண்டாவதாக, திரும்ப திரும்ப ஒரே நடவடிக்கை காட்டப்படுகொண்டே வருகிறது. இந்த படத்தில் அவனுடைய பயணமே அந்த நடவடிக்கையாக கொள்ளலாம்.அதுவே படத்தின் முக்கியமான கதைப்பொருளாகவும் பின்னர் மாறுகிறது. அந்த சிறுவனின் இத்தனை அயர்ச்சியான பயணத்தை நீங்கள் பின்தொடர்ந்து வந்ததும்.அவனுடைய உலகத்தில் ஒரு நாள் முழுக்க ஆழ்ந்து இருந்ததுமே இறுதிக்காட்சியில்ஏற்படப்போகும் அந்த மனதைப்பிசையும் பெருஞ்சோகத்திற்கு காரணமாக இருக்கும்.மூன்றாவதாக, படம் முழுக்க முழுக்கஉண்மைக்கும் இயல்புக்கும் ஒத்து இருப்பதற்காக கடினமாக உழைத்திருப்பது. நடிப்பு தொடங்கி, ஒளிப்பதிவு, சப்தம், கதைக்களம்என்று நம்பகத்தன்மையை கூட்ட முயன்றிருப்பது. இவைதான் இன்றைக்கு பெரும்பாலான உலக சினிமாவின் அடிப்படை கூறுகள்.

உண்மைக்கு அருகாமையில் இருப்பதற்காக படங்கள் சுவாரஸ்யமாக இருக்காது என்று அர்த்தம் கொள்ளத்தேவையில்லை. அன்றாட வாழ்க்கை நெருக்கமாக காட்டப்படும்போது அதோடு நாம் சுலபமாக ஒன்றிபோய் விடுகிறோம். அதையே தளமாக பயன்படுத்தி பாத்திரங்களுக்கு நடக்கும் மெல்லிய உணர்வு மாற்றங்களைகூடநம்மால் பல மடங்கு வீரியத்தோடு கடத்தி விட முடிகிறது.இயல்பான நடவடிக்கைகளை தொடர்ந்து ஒரு சிறிய அசாதாரணமானகாட்சி வந்தால் கூட நமக்கு சுவாரஸ்யம் கூடி விடுகிறது. உதாரணமாககடினமானபனிப்பாதை வழியே நடந்து வந்து ரயில் நிலையத்தில் காத்திருக்கும் அவன் தூங்கிபோய் விடுவான். சிறிது நேரம் கேமரா நடைமேடையில் ரயில் வருவதை அவதானித்துக்கொண்டிருக்கும். பயணிகள் தங்குமறையில் தூங்கிப்போய் இருக்கும் அவன் எழும்பி விடுவானா, ரயில்அவனை விட்டு விட்டு சென்றுவிடுமா என்று நாம் பதறும் வேளையில் கடைசி நிமிடத்தில் எழுந்து ஓடி வருவது ஒரு திகிலான அனுபவமாக இருக்கும். இப்படி வாழ்வின்சிறு சிறு நிகழ்வுகள் கூட படத்தில் சுவாரஸ்யமாக அமைவதற்குஇந்த ரியலிச பாணியை ஒத்த திரைமொழிதான் காரணம்.

அதைத்தாண்டிகதைத்தளத்திலும்இன்றையசினிமாவில் புதிய புதிய எல்லைகளை பரிசோதித்து வருகிறார்கள். ஒரு குறுகிய வரையறைக்குள் இன்றைய சினிமாவின் கதைகளை சுருக்கி விட முடியாது எனினும் சில ஒத்த பண்புகள் இருக்கவே செய்கின்றன.மிகை உணர்ச்சியற்றகதைநகர்வு அல்லது திகிலற்ற கதை சொல்லல் முறை ( Anti thriller) என்ற புதிய அணுகுமுறை உருவாகி இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை கொண்ட படம்தான் Staying Vertical ( France, 2016)  . ஒரு திரைக்கதை எழுத்தாளன் தன்னுடைய அடுத்த கதையை எழுத முடியாமல்தவிக்கும் ஒரு தருணத்தில்தூரத்து நிலத்திற்கு எழுதுவதற்கானபுத்துணர்ச்சியை தேடிச் செல்கிறான். அங்கு அவன் சந்திக்கும் மனிதர்கள், அவன் உருவாக்கிக்கொள்ளும் புதிய உறவுச்சிக்கல்கள், ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் நடக்கும் அபத்தமான நிகழ்வுகள் என்றுஇந்த படம் நம்முடைய ஒவ்வொரு எதிர்பார்ப்போடும் விளையாடி, அதை உடைத்துகொண்டே செல்லும். நாம் நினைத்தது போல எதுவுமே நடக்காது. ஆனால் திரையில் நிகழும் அபத்தங்களை விலகி இருந்து ரசித்துகொண்டே இருப்போம். நம்மை கதையில் இருந்து விலக்கி வைத்திருப்பதன் மூலமும், நம் முன்முடிவுகளை உடைத்துகொண்டே இருப்பதன் மூலமும். இதுவரை சினிமாவில் இப்படியெல்லாம் காட்டவே கூடாது என்ற வரையறைகளுக்கு எதிர்மறையாகபடம்பிடிப்பதன்மூலமும் வழக்கமாகநமக்கு பழக்கப்பட்ட சினிமாவாக இது தோன்றாது.


அடுத்ததாக,இன்றைய சினிமா நிறையதிருப்பங்களும், சம்பவங்களும் நிறைந்த கதைகளை சொல்லும் இடத்தில் இருந்து நகர்ந்து வந்துவிட்டது.குறைந்த பாத்திரங்களின்அகஉலகத்தைபேசும் போக்கும் அதிகரித்திருக்கிறது. Winter Sleep (Trukey, 2014) ஒரு எழுத்தாளரின் அறச்சிக்கல்களை பேசும் படம். தன்னளவில்எல்லாம் சரி, தன்னுடைய வாழ்கை பற்றிய அறநெறி மேம்பட்டது என்று நம்பும் ஒரு மனிதர். அவரை சுற்றி இருக்கும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களை அவருடைய இருப்பு எவ்வாறு பாதிக்கிறது என்பதை அழகாக காட்டும் சினிமா. 
முக்கியமாகஇந்த படத்தில் கதைநடக்கும் புராதான அனடோலியா நிலப்பரப்பும், அவர்கள் வாழ்கையின் வேகமும் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டு இருக்கும். அவர்களுடைய உரையாடல்கள் தொடங்கி அன்றாட வாழ்க்கை என்று அத்தனையும் விரிவாகசொல்லபட்டுகொண்டே வரும்பொழுது, அனைத்துகதாப்பாத்திரங்களின் குணாதிசியங்களையும் நாம் தெளிவாகஉணர்ந்து கொண்டே வருவோம். இந்த முதன்மை எழுத்தாளர் பாத்திரம் தன்னுடைய அதீதமான அறநெறியால்மற்றவர்களை எவ்வாறுமென்மையான அடக்குமுறைக்கு உள்ளக்குகிறார்என்பதைமிக மிக நுணுக்கமாக பேசிய படம். உறவுச்சிக்கல்களை பேசிகொண்டிருக்கும் வேளையில் அந்த ஊரின்சமுதாய படிநிலைகள், அங்குவியாபித்து இருக்கும் வறுமைஎன்று கதையின் ஊடே ஊடுபொருளாக,ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தின்வாழ்க்கையை பேசிவிடுவார் இயக்குநர்.

அதேபோல சொல்லப்படும் கதையின் அளவும் தற்கால சினிமாவில் குறைந்து கொண்டே வருகிறது. சம்பவங்கள் குறைக்கப்பட்டு பாத்திரங்களின் அனுபவமும் அவர்களின் இருத்தலும் இன்றைய சினிமாவில் பிரதானமாக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் வெனிஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட Hanna (2017, France) மிக முக்கியமான ஒரு படம்.படத்தின் ஆரம்பத்தில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர்பேசிக்கொள்ளாமல் உணவருந்துகிறார்கள், அவர்களின் முகம் சோகம் தோய்ந்து உற்சாகமற்று இருக்கிறது.பின்பு, கணவரை தானே கொண்டு சென்று ஒரு சிறையில் விட்டு விட்டு வீடு திரும்புகிறார் மனைவி. கணவர் என்ன குற்றம் செய்தார் என்பது படம் முழுக்க சொல்லப்படவே இல்லை. எந்த குற்றமும் நான் செய்யவில்லை, எல்லோரும் அந்த தீங்கான செயலை நான் செய்ததாக நம்புகிறார்கள் என்று மனைவியிடம் ஒரே ஒரு முறை அங்கலாய்கிறார். அதற்க்கு பிறகு படம் அந்த வயதான மனைவியை மட்டுமே சுற்றிநிகழ்கிறது.தன் கணவர் மீதுசுமத்தப்பட்ட குற்றத்தால் தனது சுற்றமும், நட்பும்,சொந்த குழந்தைகளும் கூட அவரைஒதுக்கி வைத்திருப்பதை அறிந்துகொள்கிறோம். தனித்துவிடப்பட்ட மனைவி ஒரு வீட்டில் வேலை செய்து நாட்களை கடினப்பட்டு நகர்த்திக்கொண்டிருக்கிறார். எண்ணற்ற அவமானங்களை, பய உணர்சிகளை , வெறுமையை,உடல் வலியை, மனவலியை படம் முழுக்க அனுபவித்துக்கொண்டே இருக்கிறார்.வயதான காலத்தில் தனித்திருப்பதே கடினமானது, அதோடுகுற்ற உணர்ச்சியும், புறக்கணிப்பும் சேர்ந்து கொள்ளும்போது அந்த வயதான பருவத்தில் அவர் படும் அவஸ்தை நம்மை இம்சிக்கும்.

படத்தின் இறுதியில் விரக்தியின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட அவர், சுரங்க ரயில் நிலையத்தின்வழியேவெறுமை சூழ நடந்து செல்வதை கேமரா அவர் பின்சென்று படம்பிடித்துக்கொண்டே இருக்கும். தண்டவாளத்தின் முன்பு ஒரு ரயிலிற்காக காத்து இருக்கும் போது ரயில் வரும் சப்தம் கேட்ட உடனே ஒரு தடுமாற்றதிற்கு உள்ளாவார். ஏதோ அசம்பாவிதம் நடக்கபோகிறதென்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். அங்கு ஒரு பெரியகேள்வியும் நமக்குள் எழும், `அவர்ரயிலில் விழுந்து இறந்தாலும் துன்பமே. வாழ்கையைதொடர்ந்தாலும் துன்பமே´. அவர் எதை தேர்ந்தெடுத்தார்? என்பது படத்தை பார்க்கும் போதுநீங்கள் அனுபவிக்க வேண்டிய உணர்வு.

இந்த படத்தை போலவே பாத்திரங்களின் இன்னொரு பக்கம் சொல்லப்படாமல் இருக்கும் பொழுது, அது நம்மை கதைக்குள் அழைத்து பலவித கற்பனைகளை தூண்டி சினிமாவை வேறுதளத்திற்கு எடுத்து செல்ல உதவுகிறது.அவ்வாறே கதையில் அனைத்தையும் சொல்லாமல் நம்மை பங்குகொள்ள செய்யும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உலக சினிமாவில் நடந்து கொண்டிருக்கும் இன்னொரு முக்கியமான மாற்றம் என்பது, அது பேசி வரும் அரசியல். உலகம் முழுக்கவே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், குரலற்றவர்களுக்காகவும், மறைக்கப்பட்ட அநீதிகளை நினைவுபடுத்தியும் சினிமாக்கள் வந்து கொண்டே இருக்கின்ற. சினிமாவை வெறும் பொழுது போக்கு என்ற இடத்தில் இருந்து பார்க்காமல் அதை ஒரு அரசியல், இலக்கிய செயல்பாடாக கருதும்நிலையும்உருவாகி இருக்கிறது.அரசியல் என்பதை போதனையாக நேரடியாக பேசாமல் ஒரு வாழ்க்கையை காட்டுவதன் மூலம்,பின்னணியில் அந்த வாழ்க்கையை எந்த காரணிகள் பாதிக்கின்றன என்று அழுத்தமாக சொல்லிவிடமுடிகிறது.

Ken Loach இயக்கியI Daniel Blake (2016, UK) சமீபத்தில் வெளியான சிறந்த அரசியல் படம். ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுகாதாரத்துறையை கடுமையாக விமர்சித்து இருக்கிறது. இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட அதிகாரத்தையோ அமைப்பையோ எதிர்த்து ஏக வசனம் பேசப்பட்டிருக்காது. முன்னணி கதாபாத்திரம் தன்னுடைய உரிமையை கேட்டு மட்டும் போராடிக்கொண்டே இருக்கும். அந்த விடாப்பிடியான போராட்டத்தில் ஒரு சாமானியனை அரசும் அமைப்பும்கைவிடும் பொழுது ஒட்டுமொத்தசுகாதாரத்துறையும் தன் கோர முகம் கிழிந்து அசிங்கப்பட்டு நிற்பது போன்ற தோரணையை ஏற்படுத்தி விடுவார். இந்த இயக்குனரின் ஏனைய படங்களும் வெவ்வேறான அமைப்புக்கு எதிராக கேள்வி கேட்கும் படங்களே. ஆனால் அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வாழ்கையை பேசி அதன் வாயிலாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முயல்பவை.

இப்படி கதைகளின் எல்லைகள் விஸ்தரிக்கப்பட்டு கொண்டே இருக்க புனைவுக்கும் அபுனைவுக்குமான இடைவெளியும் குறைக்கபட்டுக்கொண்டே வருகிறது. அதே போல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படங்களும் இந்த இடைவெளியை குறைக்க முக்கியமான காரணியாக உள்ளது. ஆவணப்படங்கள் வழமையான சினிமாவின் மொழியை நோக்கியும், புனைவு கதைகளை கொண்ட படங்கள் ஆவணப்படங்களின் மொழியை நோக்கியும் சென்று கொண்டு இருக்கின்றன. இரண்டும் ஒரு இடத்தில் கலந்து ஒரு புது திரைமொழியும் உருவாகிகொண்டு உள்ளது.இந்த இடைவெளியை சுத்தமாக  இல்லாமல் செய்த ஒரு படம் The Last Family (2016, Poland). 
 
உலகப்புகழ் பெற்ற போலந்து சர்-ரியலிச ஓவியர் Zdzislaw Beksinski மற்றும்அவரின் குடும்பத்திற்கு ஒரு அசாதரணமான வரலாறு இருந்தது. அவர்கள் தங்களுடைய கடைசி முப்பது வருட வாழ்கையை வீடியோ படங்களாக எடுத்துவைத்து இருந்தார்கள். அவர்கள் குடும்ப உறவுக்குள் நிகழும் சிறிய பிரச்சனைகள் ஆரம்பித்து மரணம் வரை அனைத்தையும் படம் பிடித்து வைத்து இருந்தார்கள். அதோடு சேர்ந்து அவரின் மகன் ஒரு வாரிசை உருவாக்க முடியாத உடல் சிக்கல் கொண்டவனாக இருக்கப்போக அவர்களின் கடைசி வருடங்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகிறது. மகன் இருப்புகொள்ள இயலாத ஒரு மனநிலையைக் கொண்டவன். இவர்களுக்குள் நடந்த உருக்கமானபோராட்டமே இந்த காவியம். இதுவரை இந்த கட்டுரையில் குறிப்பிட்டபடங்களில் என்னளவில் சிறந்த படம் என்றால் அது இதுதான்.

ஒரு சுயசரிதைப்படம் இத்தனை வீரியமாக சுவாரஸ்யமாகஇருக்க முடியுமா என்பது ஆச்சர்யமே. இந்த படத்தில் கையாண்ட திரைமொழி, நடிப்பு, கலை வடிவமைப்பு, கதை நிகழும் காலகட்டத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவு என்று தற்கால சினிமாவின் மிகச்சிறந்த உதாரணம் என்று இதை சொல்லலாம். தங்களுடைய கடைசி இருப்பை கலையாகவும் ஆவணமாகவும் மாற்ற துடித்த ஒரு குடும்பத்தின்,நெஞ்சை கனக்க வைக்கும் சுயசரிதை.இதைப்போல ஒரு குடும்பத்தை மிகவும் அன்னியமாக அணுகி, அதன் அன்றாட வாழ்கையின் அழகியலையும் முரண்களையும் பேசிய படம் வெகு சிலவே.
உலக சினிமாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கும் வேளையில், வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெண் இயக்குனர்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கிறது. ஆண்களின் பார்வையில் பேசப்பட்டு வந்த பெண்களின் உலகம் எவ்வளவு உண்மையை விட்டு விலகி இருந்தது என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு பெர்லின் திரைப்பட விழாவில் திரையிட்டுகோல்டன் பேர் விருதை வென்றOn Body and Soul ( 2017, Hungary) Ildiko enyedi என்றபெண் இயக்குனர் இயக்கிய படம். இந்த படத்தின் கருவே மிகவும் கவித்துவமானது. உணர்வுகளற்ற ஒரு பெண், தான் வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் தன்னை விட வயது முதிர்ந்த ஆணுடன் இணக்கம் கொள்கிறாள். அவர்கள் தங்கள் பரஸ்பர விருப்பத்தை தெரிவித்துகொள்ளவில்லை. ஆனால், இருவரும் கனவில் ஆண்மானாகவும் பெண்மானாகவும் சந்தித்துக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு உள்ளுணர்வில் இந்த மானைப் பற்றிய கனவை ஒருநாள் பகிர்ந்து கொள்கிறார்கள். அது இருவருக்கும் ஒரே மாதிரி நிகழ்ந்து இருப்பதை கண்டு ஆச்சர்யம் கொள்கிறார்கள். அந்த கனவுக்குப்பின் அவள் இனம்புரியாத உணர்வுகளுக்குள் ஆட்படுகிறாள். அவர்களின் காதலும் உணர்வுகளும் ஒன்றோடொன்று மோதி சிக்குருகிறது. ஒவ்வொரு இரவும் மான்களாக இருவரும் கனவில் சந்தித்து கொள்கிறார்கள். படத்தின் இறுதிக்காட்சியில் நடக்கும் கலவியில் அவர்களின்ஒவ்வொரு தொடுதலையும் ஸ்பரிசத்தையும் நாம் உணர்வோம். உணர்வுத்தளத்தில் இத்தனை ஆழமாக பெண்ணின் அக உலகத்தை ஒரு ஆணால் காண்பிக்கவே முடியாது என்று சிந்திக்க வைத்த படம்.

சினிமா., திரைமொழி, மற்றும் வடிவம் சார்ந்து மாற்றம் அடைவதைப் போலவே, புதிய தொழில்நுட்ப வளர்ச்சியும்சினிமாவில்பெருமளவு மாற்றங்களுக்கு காரணமாக இருந்து வருகிறது. இன்றைய டிஜிட்டல்கேமராக்கள் மிக மிக குறைந்த ஒளியில் கூட படம் பிடிக்கும் சாத்தியங்களைஅளிக்கின்றன. நம் அன்றாட வாழ்கையில் நம் கண்கள் எதை பார்க்கிறதோ அதே துல்லியத்தோடு இயல் ஒளியில் படம் பிடிக்க முடிவதால் இன்றைய படங்கள் சென்ற நூற்றாண்டு படங்களில் இருந்து பார்ப்பதற்கு தனித்து தெரிய ஆரம்பித்து இருக்கின்றன. மேலும், சுதந்திரமாககேமராவின் நகர்வையும் பரிசோதித்து பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள். தோளில் வைத்தே படம் பிடித்து முடிக்கப்பட்ட ஏராளமான படங்கள் வெளிவருகின்றன. சினிமாவின் தொழிநுட்பம் எல்லோருக்கும் கிடைக்கும் வாய்ப்பை டிஜிட்டல் புரட்சி ஏற்படுத்தி இருப்பதால் சினிமா ஜனநாயகப்படுத்தபட்டு இருக்கிறது.
 மேற்சொன்ன ரியலிசம் கலந்த திரைமொழி, கதைதளத்தில்பரீட்சார்த்த முயற்சி மற்றும் இயல்பான ஒளிப்பதிவு என்ற சாத்தியங்களோடு சேர்த்து,சினிமாவில் எடிட்டிங்கும் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது.எடிட்டிங்ஒருபுறம் அத்தியாவசியமானஒன்றாக மாறி வரும் சூழல் இருக்கும் போதும் மற்றொருபுறம் அதற்கான தேவையே இல்லாமல் போகச்செய்துகொண்டு இருக்கிறார்கள். ஒருகட் கூட இல்லாமல் இரண்டு மணி நேரம் தொடர்ந்து படம்பிடிக்கப்பட்ட Victoria(2014, Germany) மேற்சொன்னஎல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய படம்.அதிகாலைபெர்லினின் ஒரு இரவு நடன விடுதியில் ஆரம்பிக்கும் படம் இரண்டு மணிநேரம் நிகழ்ந்துவிடியலில் முடியும். இரண்டு மணி நேரத்திற்குள் பாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் உறவுகளை விஸ்தரித்து, படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பரபரப்பை தொற்றிகொள்ள வைத்து, ஒரு வங்கி கொள்ளையில் கொண்டு போய் நிறுத்தி நம்மைஅப்படியே உறைந்து போக வைப்பார்கள். விக்டோரியா மூன்று மாதங்கள் ஒத்திகை பார்த்து, மூன்றேடேக்கில் எடுக்கப்பட்ட படம். இத்தகைய படங்களை பார்க்கும் பொழுது சினிமாவின்அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. எதிர்காலத்தில் சினிமாவின் சாத்தியங்கள் என்னவாக இருக்கும் என்ற ஆவலும் மேலெழுகிறது.


- நிலவழகன் சுப்பையா